காதலின் சில வர்ணனை கூற்று அவளின் சிந்தனை சாற்று

என்னவளே -!உன்
புன்சிரிப்பில் சிதைந்த
என்
இதயத்தை மீட்டெடுக்க தயங்குகிறேன் ..
உன்
கன்னக்குழியில் நான்
புதைந்து விடுவேனோ என்று!
மூச்சு காற்றுக்கூட மோட்சம் பெறும்
சில நிமிடம் - பெண்ணே !
உன் கூந்தலில் சூடிய மல்லிகை
பூ வாசத்தால்.......