புது வசந்தம்
பாலைவனமாக இருந்த என் வாழ்வில்
நீ வந்ததும் வைகறையாய் ஆனேன்
அர்த்தமுள்ள புது வாழ்வை
ஆரம்பித்தேன் ...
அழகான கவிதைகளை எழுதினேன்
உனக்கும் எனக்கும் இடைவெளியும் வந்தது
இன்று இலவுகாத்த கிளி போல இருக்கிறேன்
நீ மறுபடியும் கிடைக்கும் வரை .
காதல் அவஸ்தை
காதல் என்னை கரை சேர்க்கும் என நினைத்தேன் .
கண்ணீரால் எனை மூழ்கடிக்கும் என்பதை அறியாமல்
காதல் புனிதம் என நினைத்தேன்
என் புனிதத்தை இழப்பேன் என்பதை தெரியாமல்
காதல் உயிரென நினைத்தேன்
என்னுயிரை குடிக்கும் என்பதை நினையாமல்
காதல் என் சொத்தென நினைத்தேன்
என் சொந்தங்களை தொலைத்திடும் என்பதை புரியாமல்
காதல் இன்பமானது என நினைத்தேன்
துன்பம் சொந்தமாகும் என்பதை எண்ணாமல்
இல்முன்னிஷா நிஷா