எப்போது நீ
உன் பார்வை மழைக்காக
விரித்த குடையின்
கம்பியாய்
மனம்..
மழையோர சாளரக்கம்பிகள்
உதிர்க்கும்
நீர் திவலையாய்
அல்லாடுகிறது
உள்ளம்..
காரைத்தளங்களில்
மழைநீர் பறித்த
குழிகளில்
பதுங்கியிருக்கும்
அடுத்த உன்
வருகைக்கான
எதிர்பார்ப்பு ..
காற்றோ காகமோ
காட்டிய தயவில்
வீட்டுசுவற்றின்
விரிசல்களுக்கிடையிலான
செடியாய்
அலைகழிப்பு ..
கார்கால கம்பளியாய்
என்னை
மூடும்
எப்போதோ
விட்டுசென்ற
உன் சுவாசம் ..
கண்ணே !
எப்போது
என் நாட்டில்
நீ மழையாய் ??