அவளுடன் ஒரு நாள்
என்னவளுக்காக
ஒரு கோயில்
கட்டினேன்
என் இதயத்தில்...
என்றாவது
ஒரு நாள்
இணைந்திடுவோம்
என்ற நம்பிக்கையில்...
ஆனால் அவளோ
எங்கோ ஒரு
கண்காணா தேசத்தில்...
என் உயிரில்
கலந்த அவள்
என்றாவது ஒருநாள்
வருவாள் எனை காண
அப்பொழுது நான்
இல்லாமலும் இருக்கலாம்
இப்பூவுலகினில்...
அந்த ஒரு நாள்
நான் அவளுடன்
இருக்கும் நன் நாள்...