காயங்களை

நீ தந்த காயங்களை நீயே மாற்றி விட்டு - இப்போ

சாட்சிகளின்றி என் உயிரையே பறித்து விட்டாயே!

உன் நலனின் என் உயிர் வைத்து உனை காக்க - என்

உயிரையே நீ கேட்பாயென நான் அறிவேனோ !

உன் ஆசைகள் என் ஆசையென நிறைவேற்ற - உனக்கு

என்னொருவன் மேல் ஆசையை நான் அறிவேனோ!

நீ பேசிய வார்த்தைகள் இன்று - என்

காதில் இடியாகவே ஒலிக்கின்றது தாங்குமோ என் தோழி!

என் கதை கேட்ட கற் சுவர் கூட கண்ணீர் வடிக்கின்றது

உன்னால் மட்டுமே முகம் மலர்ந்து சிரிக்க முடிகின்றது

எழுதியவர் : அன்புடன் விஜய் (15-Feb-11, 7:27 pm)
சேர்த்தது : vijeyananth
Tanglish : kaayangalai
பார்வை : 514

மேலே