பாரதி என் முன் மாதிரி

செந்தமிழ் நாடெனும் போதினிலே -என
சொந்த தமிழ்நாட்டினை ஜோதி உள்ளதென ஆக்கிய
மாக்கவி பாரதி
என் முன் மாதிரி ...

வித்தகப் பாக்கள் கொண்டு
யுத்தங்கள் சமச்சீர் படுத்தி
பக்கங்கள் நிரப்பிப் பாடி
பாரதி நிறைவுற்ற பாட்டுக்கள் நிறைய படித்ததினால்
பாரதி என் முன் மாதிரி .

அர்த்தங்கள் அறிவுக்குள் புகுந்து நோக்கும்
அதிசயம் விரிந்து பார்க்கும்
பாரதி புதுசாய் எழுதிய பாடல்கள்
பாருக்கே சீர்மை காட்டும் !
பன்மொழிப்புலமைகள் பாரதிக்கு
நன்மொழி தமிழினை
காப்பது பெருமைக்கு !

பாரதிக்கு,
விஞ்ஞானச் சுடரும்
மெய்ஞானம் பகரும்
தெய்வ வல்லமையும்
தெளிதுயர்ந்த கீர்த்தியும்
பழுது மாய்ந்த பாட்டும்
விழுது விடுத்த தேச பக்தியும்
மெழுகு போல் உருக வைத்த
மேன்மையுறு பாரதிக்கு
இந்த வம் தமிழன் வரமாக்கும்
பாரதியின் வார்த்தைககளை ...


பாரதியே என்
முன் மாதிரி !!!


-இளந்தமிழ்
கவிஞன்
வம்தமிழ்

எழுதியவர் : இளந்தமிழ் கவிஞன் வம்தமிழ (10-Mar-14, 5:56 pm)
சேர்த்தது : R.Raguraaman
பார்வை : 119

மேலே