நீதி
நீதி
------
ஆசாமி: நீதி ஐயா இருபது வருஷம் முழுசா
ஆய்டுசுங்க எங்க கேஸ் ல இன்னும்
நீதி ஏதும் கிடைக்கலீங்க ;இப்படியே
போனா நாங்க புல்லு முளச்சி
போய்டுவோங்க.
வக்கீல் : சும்மா இருயா; நீ யாரு , எம்.பீ யா
எம். எல் யா ;இல்ல ஒரு வட்டம் ,
ஏதாவது ஒன்றா
ஆசாமி: எதுவும் இல்லை ஐயா
நான் ஒரு சாதாரண மனிஷன்
உங்களுக்கே தெரியும் நீதிக்கு-
நியாயத்திற்கு அலையறேன்
நிலம்-புலன் எல்லாம் போச்சுங்க
உங்களுக்கு பீஸ் கொடுத்து
எப்பதான் நீதி கிடைக்குங்க
நீதி அய்யா : இந்த கேஸ் விசாரணை இன்னும்
மூணு மாதம் கழிச்சு தொடரும்
ஆசாமி : என்னங்க முடிவா சொல்லுங்க
நீதி எப்போது கிடைக்கும்னு
வக்கீல் : அது அந்த நீதி தேவதைக்கும்
தெரியாது ; நீ ஒரு எம்.எல்.எ வாது
ஆகிடு நீதி விரைவில் கிட்ட
ஆசாமி : நன்றி; நாளை நமதில்லை என்ற
வாக்கு வெளிச்சமாகிறதே
இனி நீதி தேடி அலையை மாட்டேன்
என்று சபதம் எடுப்பேன்
திரை மூடுகிறது