நீதி

நீதி
------

ஆசாமி: நீதி ஐயா இருபது வருஷம் முழுசா

ஆய்டுசுங்க எங்க கேஸ் ல இன்னும்

நீதி ஏதும் கிடைக்கலீங்க ;இப்படியே

போனா நாங்க புல்லு முளச்சி

போய்டுவோங்க.

வக்கீல் : சும்மா இருயா; நீ யாரு , எம்.பீ யா

எம். எல் யா ;இல்ல ஒரு வட்டம் ,

ஏதாவது ஒன்றா

ஆசாமி: எதுவும் இல்லை ஐயா

நான் ஒரு சாதாரண மனிஷன்

உங்களுக்கே தெரியும் நீதிக்கு-

நியாயத்திற்கு அலையறேன்

நிலம்-புலன் எல்லாம் போச்சுங்க

உங்களுக்கு பீஸ் கொடுத்து

எப்பதான் நீதி கிடைக்குங்க


நீதி அய்யா : இந்த கேஸ் விசாரணை இன்னும்

மூணு மாதம் கழிச்சு தொடரும்

ஆசாமி : என்னங்க முடிவா சொல்லுங்க

நீதி எப்போது கிடைக்கும்னு

வக்கீல் : அது அந்த நீதி தேவதைக்கும்

தெரியாது ; நீ ஒரு எம்.எல்.எ வாது

ஆகிடு நீதி விரைவில் கிட்ட

ஆசாமி : நன்றி; நாளை நமதில்லை என்ற

வாக்கு வெளிச்சமாகிறதே

இனி நீதி தேடி அலையை மாட்டேன்

என்று சபதம் எடுப்பேன்


திரை மூடுகிறது

எழுதியவர் : (12-Mar-14, 2:38 pm)
Tanglish : neethi
பார்வை : 172

மேலே