என் பேனா

கற்பனை மை குடித்து
கவிதை என்னும் கருவுற்று
சீர் கெடும் சமூகத்தை
சாடுகின்ற உரங்கொண்டு
மந்திரம் கற்று
ராஜ தந்திரம் கற்று
இயல்பு மாறாமல
சடுதியில் உயிர் பெற்று
சாகா வரங் கொண்ட
கவிக் குழந்தையை
ஈன்றெடுக்கும் எனதுயிர் பேனா.....்

எழுதியவர் : சித்ரா ராஜ் (19-Mar-14, 7:59 am)
Tanglish : en pena
பார்வை : 92

மேலே