2332014 விழா குறித்து

தோழமை நெஞ்சங்களே

23.3.2014 விழா புதுச்சேரியில் மிக இனிதே நடந்தேறியது...வாழும் கவிஞர் ஒருவர் பலநிலை படைப்பாளிகளால் பல நிகழுவுகளால் பாராட்டப்பட்டது தமிழ் இலக்கிய உலகில் பேசப்பட்டு..9 நூல்கள் வெளியீடு 10 முன்னணி
கவிஞர்களின் கவியரங்கம்.80 பன்னாட்டு பாவலர்களின் பாமாலை ,உரைவீச்சு என மிக இனிமையாக விழா நடந்தேறியுள்ளது.
விழாவில் நமது தள சொந்தங்கள் பங்கேற்றது கூடுதல் உவகை...ஒரு நாள் முன்னதாக வந்திருந்து எனக்கு கூடுதல் விரல்களாகவும் குரலாகவும் தோழர் அபி செயலாற்றியதால் மூன்றாவது தோள் முளைத்தது எனக்கு...
தோழர்கள் வ.க கன்னியப்பன் முனைவர் வா.நேரு ,அபி, ஜோசப் ஜுலியஸ், ரமேஷாலம், அகரமுதல்வன்,பொ.பி.அய்யா, கவிஜி ,புலமி அம்பிகா,கே.பிரியா ஹூஜ்ஜா,சோ.சாந்தி ,புனிதா மாமனார் மாமியார் (போற்றுதலுக்கு உரிய வயதான தம்பதியர் ),சியாமளா ,உமா,அகத்தியா,நிலாசூரியனின் தம்பி,சரவணாவின் மாணவி,சிந்தாமத்தாரின் தோழன் தேவா சுப்பையாவின் தம்பி,....என என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டனர்...
களைப்பு இன்னமும் தீரவில்லை.....பிறகு இன்னும் பேசுவேன்...
பெருகும் அன்புடன்
அகன்

எழுதியவர் : அகன் (24-Mar-14, 6:40 am)
சேர்த்தது : agan
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே