விதி

கோடை மதியம்
கொளுத்தும் வெயில் !

ஐம்புலன்களும்
வறண்டு
ஐயோ பாவமென
நடந்து
கொண்டிருந்தேன் !

தொலைவில்
எதிரே
ஒருத்தி
நடந்து வந்தாள் !

அது
நடையா ?
இல்லை
நடனமா ?

என்னவொரு
ஒயில் !
பார்வைக்கு
அவளொரு
மயில் !

அவள்,
இளைஞி !

அவள் ,
அலைபேசியில்
மூழ்கியிருக்கவில்லை !

அவளிடம்
சூழல் பற்றிய
பிரக்ஞை
இருக்கத்தான்
செய்தது !

திமிர்நடை
இல்லை !

அலட்டல்
பார்வையில்லை !

அட !
அழகியும் கூட !

அருகே வந்தாள் !

உதட்டில்
குறுநகை !

நிச்சயம்
பார்ப்பாள் !
கண்கள் கலக்கும் 1
காந்தர்வம்
நடக்கும் !

நாங்கள்
ஒருவரையொருவர்
பார்த்து,
எங்களிரு
கண்கள் கலந்து,
ஒரு
அற்புத இரசாயனம்
உருவாகும்
அத்தருணத்தில் ..................

சர்ரென்று
கடந்து சென்றான்
ஒரு
வண்டியோட்டி !

நொடிப்பொழுதில்
புழுதி பறந்து,
அவள்
நாசியில்
நெடியேறி,
முகம் கோணி,
அச்ச்ச்ச்சென்று
தும்மிவிட்டு
அவள்
கடந்து விட்டாள் !

ஐயகோ ...........
பார்வைப்பரிமாற்ற
இரசாயனம்
நிகழவேயில்லையே !

நான்
உலக வெறுப்போடு
காலில் இடறிய
கல்லை
ஓங்கி ...........
ஒரு
எத்து எத்தினேன் !
அது,
எகிறிப்பறந்து
சிவனேயென்று கிடந்த
தெருநாயொன்றைப்
பதம் பார்க்க,
அது
' காள் ' என்று
கத்தியபடி
தெறித்தோடியது !

விதி !

எழுதியவர் : குருச்சந்திரன் (25-Mar-14, 10:24 pm)
பார்வை : 216

மேலே