வேட்டையாடும் ,நாட்டை யாளும் சிங்கம்
கண்ணுனது கயல் என்றால்
கவர்வது
நிஜம்தானே !
புயல் என்று புரிந்தால்தான்
புறமோடிப்போவார்கள்!
இடை உனது கொடி என்றால்
தொட்டுப் பார்க்க
துணிவு கொள்வர் ,
படமெடுக்கும் பாம்பென்றால்
பார்த்தருகில்
வருவாரோ ?
நடை உனது நளினம் என்றால்
நற்செய்தி
சொல்லுமன்றோ ?
நிலமதிர நீ
நடந்தால்
நினைப்பவர்கள்
நிற்பாரோ நின்னெதிரில் ?
மார்மீது சடை போட்டால்
மயங்குகிறாள் மாது என்பான் ,
பிண்ணிய
சர்ப்பமென
புறமுதுகில் தவழுமுடி
கண்ணியம் கூறிவிடும் !
சிங்கம்,
பெண்சிங்கம் .
வேட்டையுமாடும்,
நாட்டையும் ஆளும் !
தங்கம்,
தமிழ் சங்கம் .
கவரிமான் இந்த
காவியத் தலைவி !
ஹாய் ,
கண்ணியம்
காக்கும்
காவியத் தலைவி!!