தலைப்பு செய்தியானது
ஈழம் ....!
கனிதரும் மரங்கள்
வறட்சியால் எரிந்தது
பால் தரும் பசுக்கள்
குண்டுகள் விழுந்து பலியானது
வீடுகள் எல்லாம் விமான குண்டுகளால்
அழிந்து போனது
கடைசியாய் அடைக்கலம் தேடி
ஆலயத்தில் தங்கிய போது
ஆலயமும் எரிந்தது .......!!!!
உயிர் தப்பிய மிச்ச உயிர்கள்
தொலைகாட்சியின் தலைப்பு செய்தியானது ......!!!!
/சுபபாலா /

