தமிழ்
என்னுயிர்த் தாய் தமிழுக்கே
என் இதயம் உருக முதல் வணக்கம்
உலகில் மொழிகள் பல இருக்கலாம்
ஆனால்,தமிழ் மொழி போல் இல்லை
ஆறுமுகனின் கூர்மையான வேலைப் போல்
சக்தி மிகுந்தது என் தமிழ் மொழி இவ்வுலகில்
தமிழ் ஞானியர்கள் பலர் இறந்திருக்கலாம்
அனால் தமிழ் மொழி என்றும் இறக்கவில்லை
நான் ஒரு அதிர்ஷ்டசாலி
என் தாய் மொழியே தமிழாக இருக்கின்ற பொழுது
தமிழ் என்று சொல்லும்போது
என் நாவில் உமிழ்நீர் சுரப்பதில்லை
தேன் சுரக்கிறது
அயல்நாடுகளும் போற்றும் பைந்தமிழை என்றும்
வாழ்க ! வாழ்க ! வாழ்க ! எனப் போற்றுவேன்