கடிகாரமும் மீனும் - சிலேடை

நிற்காது என்றுமிது முட்களால் ஆனதிது
சற்றே தளராது ஓட்டத்தில் - உற்றுநோக்கி
கற்றால் இமைபொழுதும் சோரா தியங்கிடுமே
சுற்றும் கடிகாரம் மீன்

கடிகாரம் : என்றும் யாருக்காகவும் நிற்காது. முட்களால் ஆனது. சற்று கூட தளராது ஓட்டத்தில்.
உற்றுநோக்கி பார்த்தால்(கற்றால்) உலகே !இமைபொழுதும் சோராது இயங்கிடும்.

மீன் : ஓரிடத்தில் நிற்காது.முட்களை எலும்புகளாய் ஆனது. சற்று கூட தளராது நீரில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.உற்றுநோக்கி பார்த்தால்(கற்றால்) உலகே ! இமைபொழுதும் சோராது விளையாடிடும்

விவேக்பாரதி

படம் : கூவிரம்

எழுதியவர் : விவேக்பாரதி (24-Apr-14, 11:19 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 230

சிறந்த கவிதைகள்

மேலே