கடிகாரமும் மீனும் - சிலேடை
நிற்காது என்றுமிது முட்களால் ஆனதிது
சற்றே தளராது ஓட்டத்தில் - உற்றுநோக்கி
கற்றால் இமைபொழுதும் சோரா தியங்கிடுமே
சுற்றும் கடிகாரம் மீன்
கடிகாரம் : என்றும் யாருக்காகவும் நிற்காது. முட்களால் ஆனது. சற்று கூட தளராது ஓட்டத்தில்.
உற்றுநோக்கி பார்த்தால்(கற்றால்) உலகே !இமைபொழுதும் சோராது இயங்கிடும்.
மீன் : ஓரிடத்தில் நிற்காது.முட்களை எலும்புகளாய் ஆனது. சற்று கூட தளராது நீரில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.உற்றுநோக்கி பார்த்தால்(கற்றால்) உலகே ! இமைபொழுதும் சோராது விளையாடிடும்
விவேக்பாரதி
படம் : கூவிரம்