என் வாழ்க்கை புதிர்

என் வாழ்க்கை புதிர், புரிகிறதா என்று பாருங்கள் !
பள்ளியில் இமைக்காமல் உன்னை பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள்,
கல்லூரியிலும் உன்னைத் தேடுகிறது !
ஆனால்,
வகுப்பறை வெறுமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது !
நீ இல்லாத வகுப்பறையில் ஒரு நொடி கூட,
இருக்க இயலவில்லை !
முதல் வருடத்தில் மூன்று மாதங்களும்,
இரண்டாம் வருடத்தில் இருபது நாட்களும்,
மூன்றாம் வருடத்தில் மூன்று நாட்களுமே
வெறுமையின் வலியில் வாழ்ந்தேன் !