உண்டா ரெனப்படுவர் யாவர் - ஆசாரக் கோவை 18

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து. 18 ஆசாரக் கோவை

பொருளுரை:

குளித்து, கால்களைக் கழுவி, வாயைத் துடைத்து, உணவு பரிமாறப்பட்ட இலை, தட்டைச் சுற்றி நீரிறைத்து, உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்லி உண்பவர், உண்டதாகக் கருதப்படுவர்.

இப்படிச் செய்யாமல் உண்டவர் உண்டாரைப் போல வாயைக் கழுவிச் செல்பவர் உண்பதை அரக்கர் சினந்து எடுத்துக்கொள்வதாகக் கருதப்படுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-14, 4:56 pm)
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே