திருவந்தாதி தொடர்ச்சி
முதல்வனுக்கு முதல் வணக்கம்
கணபதி உன்னை வணங்கும்
கருணை எனக்கு செய்வாய் !
குணவதி கம்பா நதியாள்
குறித்து எழுதிவைக்க ,
துணைநீ இருந்து தொடர்ந்து
வருக தொடுத்திடவும்;
இணையாய் இருந்து இயல்பாய்ப்
படைக்கத் துதித்துநின்றே!
நூல் !
கம்பா நதிவாழும் அன்னையாம்
காமாட்சி உன்புகழை,
செம்மொழி கொண்டு செயும்நல
திருவந்தா திக்கு மிங்கு ,
அம்பலம் ஆடி ,அறவத்தைச்
சூடி அருள்சுமந்து ,
வெமபகடு ஊரும் வார்ச்சடையன்
தந்து அருள்வானே!
(தொடரும்)