திருவந்தாதி தொடர்ச்சி

முதல்வனுக்கு முதல் வணக்கம்

கணபதி உன்னை வணங்கும்
கருணை எனக்கு செய்வாய் !
குணவதி கம்பா நதியாள்
குறித்து எழுதிவைக்க ,
துணைநீ இருந்து தொடர்ந்து
வருக தொடுத்திடவும்;
இணையாய் இருந்து இயல்பாய்ப்
படைக்கத் துதித்துநின்றே!

நூல் !
கம்பா நதிவாழும் அன்னையாம்
காமாட்சி உன்புகழை,
செம்மொழி கொண்டு செயும்நல
திருவந்தா திக்கு மிங்கு ,
அம்பலம் ஆடி ,அறவத்தைச்
சூடி அருள்சுமந்து ,
வெமபகடு ஊரும் வார்ச்சடையன்
தந்து அருள்வானே!
(தொடரும்)

எழுதியவர் : ந. ஜெயபா;லேன், திருநெல்வேல (1-May-14, 7:48 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 80

மேலே