நிம்மதியைத் தேடி கவிதை

*
வெகு சீக்கிரத்தில்
யாரையும்
நம்பிவிடுவதில்லை
ஆடுகள்.
எப்பொழுது
வெட்டுப்படுவோம்
என்பது புரியாமல்
கசாப்புக்காரனை
நம்பி
அவன் பின்னால்
போய்க் கொண்டிருக்கிறது
கம்பீரமாக…!!.
***
*
அம்மாவைப் பற்றி
அப்பாவிடம்
அப்பாவைப் பற்றி
அம்மாவிடம்
இப்பொழுதே
போட்டுக் கொடுக்க
ஆரம்பித்து விட்டன
சின்னக் குழந்தைகள்
.*
நிம்மதி நிம்மதி
நிம்மதியில்லாமல்
நிம்மதியைத் தேடி
அலைகிறது மனம்.
***

எழுதியவர் : ந.க.துறைவன் (6-May-14, 9:35 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 278

மேலே