துறைவன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/rutfy_22705.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துறைவன் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 1441 |
புள்ளி | : 914 |
வாசகர்
புள்ளி
வசீகரமான
அழகு.
*
புள்ளி வைத்து
இன்னிக்கு
என்னைக்
கைப்பற்றினாள்
கள்ளி.
*
புள்ளியில் தொடங்கி
புள்ளியில்
முடிகிறது
வாழ்க்கை.
புள்ளி
வசீகரமான
அழகு.
*
புள்ளி வைத்து
இன்னிக்கு
என்னைக்
கைப்பற்றினாள்
கள்ளி.
*
புள்ளியில் தொடங்கி
புள்ளியில்
முடிகிறது
வாழ்க்கை.
மழைக்கு குடையானது கையிலிருந்த நோட்புக்.
*
மழைக்கு ஒதுங்கியவள் அருகில் சூடான மனிதர்கள்.
மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் கிளிக்கு மன்மதக் குளிர்.
*
மழைத்துளிகளோடு சேர்ந்து உதிர்ந்தது பவளமல்லிப்பூக்கள்.
*
மழை நின்றபின் மலர்களிடம் குளிரைப் பற்றி விசாரித்தது பட்டாம்பூச்சி.
ந.க. துறைவன்.
இருக்கிறேன் என்று சொன்னவர்
எங்கே இருக்கிறார் என்று சொல்லவில்லை.
அருகிலா, தொலைவிலா, வீட்டிற்குள்ளேயா?
எங்கே என்று அனுமானிக்க முடியவில்லை.
இருக்கிறேன் என்பது நிகழ்காலந்தான்
அதுவே
கடந்த காலமாகக் கூட இருக்கலாம்.
இப்பொழுது அவர் தன்னிருப்பை
இருண்மையில் உணர்த்தவே
இருக்கிறேன் என்றாரா?
இருப்பவர்களும்
கடந்துச்செல்பவர்களும் தான்
எப்பொழுதும் இருப்பார்கள்.
இருக்கிறேன் என்பது இருப்பின் நிலை
இருக்கிறவர்களின் முரண் மனநிலை.
இறக்கப் போகிறவர்களின் கனவு நிலை.
ந.க.துறைவன்.
தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்
*
தென்னம் பூவே….!! {கஜல்}
*
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
*.
கூட்டத்திலே நீயொருத்தி
அழகுடியோ எந்தன் கண்ணே
உனைத் தொடுவதற்கு வெட்கமா
இருக்குதடி தென்னம் பெண்ணே
*.
சிரிக்கும் போது வெடிக்குதடி
தென்னம் பாளை- அந்த
சிரிப்பினிலே சொக்கி போயி
நிக்கிறேனே இந்தக் காளை.
*
காற்றினிலே ஆடியாடி ஓய்யாரமா
அலையுதடிப் பச்சைச் ஓலை
எனக்கு வெஞ் சாமரமாய்
விசுறுதடி விடியற் காலை.
*
யாரும் பார்க்கக் கூடா தென்றா?
சின்னச் சின்ன மஞ்சள் பூவே
மறைந்து நீயோ அழகாகப்
பூத்திருக்கிறாய் தென்னம் பூவே
*.
உதிர்ந்து வந்து விழுந்து விடு
என் இதயத்தின் மேலே
உனை ந