கல்லறை பூக்கள்

தேடினேன் நான்
உன்னை தேட்டமுடன்
உனது கல்லறையில்...........!
மீண்டும் நீ
வருவாயா என்னிடம்
இணைவாயா.........!
எனது தவறால்
நீ மரித்தாய் - நானோ
இருந்தும் இல்லாமல்
வாழ்கிறேன்
உனது பிரிவால்..........!
எனது மேல்
கொண்ட பாசம்
உனது உயிரை பறித்தது
எனது இதயம் துடித்தது
அனுதினமும்..........!
உள்ளத்தை
உடைத்து
உடலோடு இணைந்தவள்
உயிர் அற்ற பிண்டமாக
சென்றாய்
நமது காதலை
நிலைபெற
செய்தாய்.........!
மறக்க முடியுமா
தவிர்க்க முடியுமா
நமது உறவை...........!
தவிக்கிறேன்
அழுகிறேன் - நீ மீண்டும்
வர உனது அருகிலே
நமது
காதலோடு...........!
எனது கண்களில்
இடைவிடா கண்ணீர்
உனது நினைவுகள்
எனது உள்ளத்தில்
தொடர்வதனால்...........!
பிரிவை
வெறுக்கிறேன்
துயரம் அடைகிறேன்
நீ ஒருநாள் என்னிடம்
மீண்டுவிட
ஆவலும்
கொள்கிறேன்..........!
எனது விழிகள்
உறக்கத்தை
மறந்தது உலகத்தை
துறந்தது எங்கும்
நீதானே
தெரிகிறாய்...........!
காற்றோடு
கலந்தவளே
கல்லறைக்குள்
இருப்பவளே உனது
அழுகை எனக்கு
தெரிகிறது எனது மனம்
உணர்கிறது..........!
கவலை
கொள்ளாதே
நமது
உறவு நீடிக்கும் நமது
காதலை வாழ்விக்கும்
இந்த கல்லறை பூக்கள்..........!