தீராக் கடன்
வலிகள் அனைத்தும் அரவணைத்துக் கொண்டு வசந்தங்களை மட்டும் எனக்கு தருபவளே !
உன் வீட்டு மகளை மாற்றான் வீட்டு (மறு) மகளாக அனுப்ப எப்படி மனம் வந்ததோ..?!
நீ இன்றி நான் இல்லை , நான் இன்றி நீ இல்லை என்று தெரிந்தும் , ஊர் உறவு பேச்சுக்காக என்னை பிரிய துணிந்த உனக்கு,
வழி தெரிந்தால் கூறு
நான் உன்னிடம் பெற்ற தீரா அன்பு கடனை தீர்க்க ….!!!

