மண் - படைக்கவி

காறித் துப்பிய எச்சிலையும்
கழித்த மல சல கழிவுகளையும்
ஏந்திக் கொள்ளும் !

வெடி வைத்து தகர்த்தாலும் ,
வெட்டிக் குத்தி குழி பறித்தாலும் ,
கட்டிக் கட்டி கட்டிடமாய் தன்மேல் வைத்தாலும்
சுமக்கும் !

பயிர்களைத் தாங்கி
பலன் தரும் ,
மரங்களைத் தாங்கி
பழந்தரும் !

உயிரோடிருக்கும் வரை
மட்டுமல்ல ;
உயிர் நீங்கிய உடலையு மது
தாங்கிக் கொண்டுதானி ருக்கிறது ,
எல்லாவற்றையும்
தாங்கிக் கொண்டு !

எழுதியவர் : தனராஜ் (30-May-14, 6:19 pm)
பார்வை : 225

மேலே