பேரன் குறள்கள்- 13

யோரன் குறள்படித்து யோசித்தது..[13]

ஆயுதம் செய்து,ஏன் அழிகிறோம்?, பூமியை
மா,இதம் ஆக்க மறுத்து?------------------------------------------------------121

ஆயுதம் செய்துவரும் அவ்வளர்ச்சி தன்னிலும்
தேயுதல் நன்றெனவே தேர்!-------------------------------------------------122

அன்பே சிவமாய், அதுவே இயேசுவாய்த்
துன்பம் துடைக்கத் துணி!----------------------------------------------------123

காணும் பொருளில் கருத்தழி யாதே,நின்
நாணம் கெடாது நில்!----------------------------------------------------------124

புழுக்கம் இலாது புயல்மழை இல்லை;
ஒழுக்கம் இலாதே(து) உயர்வு?------------------------------------------125

தலையின் இழிந்த மயிரனைவாய், நீயுன்
கலையை மரபைக் களைந்து!---------------------------------------------126

நிலவளம் காக்க நினைக்கின் மனத்தின்
பலவளம் போற்றிப் பழகு!--------------------------------------------------127

நல்லவர் கொண்டுதான் நாடாமால் உன்னை,நீ
செல்லுமா றறிந்து செலுத்து!----------------------------------------------128

புலனடக்கம் இல்லவர் போற்றிடின் நாட்டின்
நலமுடங்கி நாசமாய்ப் போம்!-------------------------------------------129

புலனடக்கம் இல்லாத போட்டியால் நாடும்
விலங்கொடுங்கும் வீடாகு மே!------------------------------------------130

====== ======= =========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (30-May-14, 9:47 pm)
பார்வை : 106

மேலே