பொய்கள் சூழ் வாழ்வு
எப்படியும்
சொல்ல நேரிடுகிறது
பொய்.
இங்கு
பொய்களே உண்மை
உண்மையோ பொய்.
பொய்களின்றி
வாழலாமென்றால்
பொய்களோ
காற்றைப்போல.
பொய்க்கால்
ஆட்டம் போல்
பொய்
முகத் தோற்றங்கள்.
விசுவாமித்திரர்களுக்கு
இல்லை
சிரமம்.
அரிச்சந்திரர்கள்தான்
நொடிக்கு நொடி
தோற்றுப்போகிறார்கள்.
எங்கும்
எல்லாரிடத்தும்
பொய்களின் ஆதிக்கம்.
பொய்யின்றி
இல்லை எதுவும்
என பொய்கள்.
ஆழ சூழ்
இவ்வுலகு
என்பதுபோலாகும்
பொய்கள்சூழ்
இம் மனிதம்.
பொய் சொல்லி
வாழ வாய்த்தது
இவ் வாழ்வு.