செவ்வாய்க் கனிரசமே

செவ்வாய்க் கனிரசமே !
செண்பக மலர்மணமே !
செதுக்கிய சிலையெழிலே !
செம்பொன் மேனியளே !
செங்கரும்பின் இன்சுவையே !
செங்கமலப் புன்சிரிப்பே !
செஞ்சாந்துப் பொட்டழகே !
செந்தூரத் தேனிதழே !
செஞ்சுருட்டிப் பாவினமே !
செண்டாடும் ஓவியமே !
செருக்கில்லா காவியமே !
செம்மொழிக் கவிதையிலே
செயப்படு பொருளானாய் !
செயலற்று நின்றுவிட்டேன்
செயமாய் நீவந்திடுவாய்
சென்மம் ஈடேற்றிடுவாய் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Jun-14, 10:42 am)
பார்வை : 157

மேலே