பருவத்தின் வாசலிலே

குழந்தை பருவம் குடிகொண்ட இன்பம்
தொழுதால் வருமோ தொடர்ந்து?

வறுமை இருந்தும் வசதி குறைந்தும்
பெருமை படைத்து மகிழ்ந்த சிறுவர்
வயது சிரிக்கும் மலர்ந்து.

வண்ணத்துப் பூச்சி வருணங்கள் தொட்டெடுத்து
எண்ணமென்னும் ஏட்டில் எழுதிட்ட வண்ணக்
கவிதையாய் வாழ்வின் வசந்தமாய் வாலிபச்
சிவிகை அமர்ந்த சிறப்பு.

குடும்பஸ்தன் என்னும் குணக்கொள்கை கொண்டு
இடும்பஸ்தன் என்றாகி வாழ்வில் படுங்கஸ்ட
நஷ்டங்கள் வயதின் நடுத்தரத்தில் கட்டாய
இஷ்டமாதல் வாழ்வின் இயல்.

கைநழுவிப் போகும் கடைசி பருவத்து
மெய்தளர்ந்த வாழ்வில் மரணத்தின் கைகோர்க்க
காலன் அரவணைப்பை கண்மங்கி வாய்க்குழறி
கால்களும் தள்ளாட காது செயலிழந்து
மூச்சிரைக்க வைக்கும் முதுமை எவரையும்
ஏய்ச்சதில்லை எண்ணித்தான் பார்.

வெண்பாக்கள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jun-14, 2:39 am)
பார்வை : 146

மேலே