நாங்களும் வாழனும்

இது என்ன உலகம்
ஒரு கண்ணில் அமுதையும்
மறு கண்ணில் தீயையும்
வைத்துப்பார்க்கிறதே.....

இது நியாயமா ....?
சிறுபான்மை என்றால் ஏனோ ஏளனம்
மண்ணில் பிறந்தபின்
உன்னையும் என்னையும் பிரிப்பது
இந்த மதங்கள்தானா ...
ஏன் இந்த அவலம்
ஜாதி மதம் குல பேதம்
இன்னும் எத்தனை காலம்

உனக்கு ஒரு துன்பம் என்றால்
உன்னை பெற்றவள் அழுகிறாள்
எனக்கு துன்பம் என்றால்
என்னை பெற்றவள் அழுகிறாள்
ஏதோ வகையில் நானும் நீயும்
ஒரு தாய் பிள்ளைகள்தான்

இன்று நீ ஆட்சியுடையவன்
நாளை நீயும் மண்ணில் மாயும் ஒரு ஜடம்
அதற்குள் ஏன் இந்த கொடுமை
சிறுபான்மையை அழித்தால்
நீயும் மண் வென்று விடலாமா
நீ மண்ணை ஆளப்போகிறாயா
அன்றி
மனிதம் மனம் ஆளப்போகிறாயா
முடிவெடு நீ

எத்தனை ஆட்சி கண்டு விட்டாய் நீ
ஹிட்லர் முதல் கடாபி வரை
இறுதியில் எதை கண்டனர்
ஆறடி மண்ணுக்குள்
மாண்டே போயினர்
இது கண்டும் நீ
நெஞ்சு புடைக்கிறாயா ...?

நாலு மதங்கள்
மனம் அறிந்து ஆட்சி புரி
அதுதான் உண்மை ஆட்சி
உன் மத மக்களை மட்டும்
ஆள நினைக்காதே
சட்டிக்குள் குதிரை
ஓட்டுவதாய் அமைந்துவிடும்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (16-Jun-14, 6:53 pm)
பார்வை : 180

மேலே