மானுடமே

மனித பிறவியின்
மகத்துவம் தெரியாமல்
கிளியிடமும்,
எளியிடமும்
எதிர்காலத்தை
கேட்பது
ஒன்பது கட்டத்தில் வாழ்க்கையை புதைத்து விட்டு
ஜோதிடரை தேடி ஓடுவது
குடுப்பை காரனிடம்
குறிகேட்டு கெடுவது
வேப்பிலையை
உருவி ஒத்தையா ரெட்டையா
கேட்பது
போலி சாமியாரிடம்
தேடி போய்
ஏமாறுவது
தாய் தந்தை
சூட்டிய பெயரை
எண் கணிதம்
என்று மாற்றி கொள்வது

இன்னும் எத்தனையோ
விதங்களில்
கொலைகள் செய்கிறோம்
மானுட பிறவியின்
மகத்துவத்தை

நமக்கான வாழ்வை
அடுத்தவரிடம்
அடமானம் வைக்கும்
அவலம் மாறுவது
எப்பொழுதோ???

எழுதியவர் : ந.சத்யா (16-Jun-14, 6:30 pm)
Tanglish : maanudame
பார்வை : 98

மேலே