நீயும் இந்திய நாட்டின் அகதிதான்

மாண்டது மனிதத்துவம்
நீண்டது மதத்துவம் !

சரிந்தது சமத்துவம்
வளர்ந்தது சாதித்துவம் !

மதம் பார்த்து நாம்
மாற்றியது என்ன ?

சாதி பார்த்து நாம்
சாதித்தது என்ன ?

அங்கே இனம் அழிந்த போது
இங்கே ஐம்புலம் அடங்கிப் போனதென்ன ?

அங்கே ஆதரவின்றி அகதியாய் வந்தான்
இங்கே ஆதரவு தந்தும்
அகதியாய் வாழ்வதென்ன ?

சிறைக்குள்ளும் முல்வேளிக்குள்ளும் வாழ
பயந்து தானே வந்தான் !

இங்கேயும் சிறைச்சாலையிலும் முகாமிலும்
அடைத்து வைப்பதெனில் !

இரு நாடுகளின் நோக்கமென்ன ?

என் முன்னே என்னினம் வதைபடுவதும் கொள்ளப்படுவதும் ஏன் ?

என்னால் எதையும் தடுக்க முடியாமல்
போனதே காரணம் என்ன ?

நீயும் இந்திய நாட்டின் அகதிதான்
என்பதைதைத் தவிர வேறென்ன ?

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (17-Jun-14, 11:21 am)
பார்வை : 110

மேலே