தெய்வம் இருப்பது எங்கே

கோடிப் பணத்தை வாரி யிறைத்தாலும்
தேடியந்தத் தெய்வம் வராது - தினம்
பாடிப்பாடிப் பால்பழம் தந்தாலும் - நீ
கேட்ட வரத்தைத் தந்து விடாது

வாடும் ஏழையின் வாட்டத்தைப் போக்கும்
உள்ளத்தில் தெய்வம் வலம்வருமே - அவர்
நாளும் ஆற்றும் சேவையில் கலந்து
நன்றிக்கு வித்தாய்ச் பயன் தருமே!

ஆசை சகதியில் ஆடிக் களிக்கும்
அற்பர்க்கு உண்மை புரியாது - என்றும்
காசைப் பெரிதாய் மதிக்கும் மூடர்
கண்ணுக்கு அந்தத் தெய்வம் தெரியாது!

எழுதியவர் : குழலோன் (19-Jun-14, 3:06 pm)
பார்வை : 410

மேலே