தம்மொளி வேண்டுவார் நோக்கார் - ஆசாரக் கோவை 51

மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள்
...கோலமுந்
தம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியு மற்று. 51 ஆசாரக் கோவை

பொருளுரை:

தாம் புகழ் பெற வாழ விரும்புபவர் மின்னலின் ஒளியையும், விழுகின்ற எரிநட்சத்திரத்தையும், விலைமாதரின் ஒப்பனையையும் பார்க்கமாட்டார்.

பகலுக்கு உரியவனான சூரியனின் காலைஒளியும், மாலைஒளியும் பார்க்கத் தகாதன எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-14, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே