கண்ணாமூச்சி

அழைத்ததில்லை
கவிதைகளை
இருந்தும்
கொட்டிக்கொண்டுதான்
கிடக்கின்றது
கட்டுகடங்கிடா
கற்பனை குதிரைகளை
பின்தொடர்ந்து ...

அழைத்ததில்லை
எண்ணங்களை
இருந்தும்
நிரப்பிக்கொண்டுதான்
இருக்கின்றது
மனதோடு நாட்களையும்
நீங்கா நின் நினைவுகளை
பின்தொடர்ந்து ...

இப்படி,
அழையாதவையெலாம்
அணியணியாய் அணி சேர்ந்து
செவ்வென பணி செய்திட

அழைக்கிறேன்  உனை
இருந்தும்,
தனியேதான் தவிக்கவிட்டு
கண்ணாமூச்சி   ஆடுகின்றாய்
என் கண்ணா !!

எழுதியவர் : (25-Jun-14, 5:37 pm)
Tanglish : kannamoochi
பார்வை : 109

மேலே