கடையும் கடைக்குட்டியும்

படம் :- என் முகநூல் நண்பர்... திருமிகு. .சுருளிப்பட்டி சிவாஜி அவர்கள்
---------------------------------------------------------------------------------------------------------

கடை போட்டாயிற்று
அஞ்சுக்கும் பத்துக்கும் பிசுவும் பாவிமக்களை பார்த்தாகனும்...

கிள்ளிப் பார்த்து, நசுக்கிப் பார்த்து
அமுக்கிப் பார்த்து உடைத்துப் பார்த்து வெறும் பத்தஞ்சுக்கு
காய் வாங்கும் கயவர்களை சமாளிக்கனும்...

நூறுக்கே போணியாக தட்டுத் தடுமாறும் சமயம்
கறாராய் வந்து நிற்கும் கந்து வட்டிக்காரனை
அச்சுப்பிச்சுப் போட்டு அனுப்பனும்...

மதியம் எனக்கு இருக்கு தண்ணி சோறும் பச்சை மிளகாயும்… நான் சாப்பிட்டுருவேன்...
கொத்து வேலைக்குப் போன என்வூட்டுக் கார மனுசன் சாப்புடுதோ என்னமோ?

மேஸ்திரி இன்னைக்கு கூலி தருவாராமா..
மனுசன் டாஸ்மாக்குள்ளே போகாம
பத்திரமாய் வரனுமே சாமி....

அம்பதோ நூறோ தெனம் மனுசன் கொடுத்துச்சுன்னா...?
என்னோட செருவாட்டுக் காசையும் போட்டு
ஆறேழு மாசத்துல
தாலி ஒண்ணு வாங்கிடோனும்...
கடைக்குட்டியை
கரை சேக்கனுமே...!?

எழுதியவர் : பா.குணசேகரன் (25-Jun-14, 8:35 pm)
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே