மீண்டும் வானம்பாடி=பஃறொடை வெண்பாக்கள்

1)
இழந்த உரிமை, இழைக்கப்பட்ட இன்னல்,
அழுதே தொழுதும் அரங்கேற்றி விழுத்த
பலபேர் இணைந்து பசிதீர்த்துக் கொண்ட
குலமாதர் கற்பும், குழந்தை உயிரும்
ஒருநாளில் கொன்ற உயிரனைத்தும் கேட்ட
மறுமலர்ச்சித் தீண்டின் மனவானம் பாடி
சிறகடிக்கும் மீண்டும் சிரித்து.!
2)
திலகம் இழந்து தினந்தோறும் கண்ணீர்
உலப்பி உருகித் தவிக்கும் நிலவாய்
வசந்தம் விரும்பும் விதவை மனதை
இசைந்த குணத்தோடு ஏற்கும் மனம்வைப்பின்
மீண்டும் அவர்வானம் பாடியாய் அன்புண்ணத்
தீண்டும் மறுவாழ்வுத் தேன்!
(வானம்பாடி என்னும் சாதகப் பறவை சந்திரன் ஒளியைத் உண்டு வாழ்வதுபோல் இழந்த வாழ்வு கிடைப்பின் அன்பைமட்டும் புசித்து வாழ நினைப்பாள் என்னும் பொருளில் அன்புண்ண என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது= உலப்பி -இரைத்து)