மீண்டும் வானம்பாடி

சுழலும் உலகத்தில் சொல்லொணா துன்பத்தில்
உழலும் மனிதன் மனதின் நிழலாய்
இருப்போர்கள் இல்லா நிலையினிலே வாழ்வில்
பெருக்கெடுக்கும் சோகம் பிரிந்தடங்கிப் போக
பொருத்தமுள்ள அன்பை புனையும் இணையாலே
வானம்பா டிப்பறவை மீண்டு சிறகடித்து
கானம் இசைக்கும் களிப்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jul-14, 6:08 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 87

மேலே