என் மரணம்சருகும் நானும்

வெள்ளத்துளிகளில் ஏதோ ஒரு
துளியால் உருவாகி.....
சுருண்டு கிடந்து.....
பின் ..சூரியக் கதிர் பட விரிந்தெளுந்து...
பச்சையம் தீரும் வரை.....
பண்டமாற்றம் நடத்தி...
சுயம் தீர
மெல்ல சருகாகி சருகாகி... பின்
உலர்ந்து ஓர் நாள்...
மரணிக்கும் சருகாய் நானும்.....
ஒரு நாள் உதிர்ந்து போவேன் என்றறிந்தும்.....
பச்சையம்(பணம்) தேடும் பந்தயத்தில்...
வேகம் குறைக்க முடியாமல் ......

எழுதியவர் : (5-Jul-14, 12:13 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 67

மேலே