நரகமாயிருக்கும் பொதுக் கழிப்பிடங்கள்

அன்பிற்குரிய தோழமையே,
நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. அவற்றைப் பயன்படுத்தும் பெண்கள் படும் அவஸ்தை நரக வேதனை. பெண்பயணிகளில் பெரும்பாலோர் பேருந்து நிலையக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அத்துடன் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்திவிட இரண்டு மடங்கு (சில பேருந்து நிலையங்களில் மூன்று பங்கு) தொகையைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இது சம்பந்தமாக மனுபோட்டுள்ளேன். தாங்கள் இந்த மனுவை ஆமோதிக்கும்படி வேண்டிக்கொளிகிறேன்.

அன்புடன்
பேராசிரியர் இரா. சுவாமிநாதன்

எழுதியவர் : மலர் (6-Jul-14, 5:33 pm)
பார்வை : 1720

மேலே