சுகமா சுமையா வாழ்க்கை

தவமாய் பிறந்தேனடா!
நலமாய் வளர்தேனடா !

என்னுள் வாலிபம் வன்ததடா !
வாசமும் பாசமும் நுகர்தேனடா !

வசதியாக வளர்த்தவர்கள் அங்கே!
வறுமையை தடுக்க விலகினேன் இங்கே!

நாட்கள் ஓடுதடா அங்கே !
நாகரிகம் துரத்துதடா இங்கே !

பலரிடம் மாற்றம் கண்டேனடா!
பணமில்லாத காரணம் அறிந்தேனடா!

குணம் கண்டு வாழ்த்துபவர் அங்கே !
பணம் கண்டு வணங்குவோர் இங்கே !

பாடுபட்டு களம் வாங்க நினைத்தேனடா !
கடவுளிடம் நலம் காக்க மறந்தேனடா!

அவசர சிகிச்சை குட
அனுமதி சீட்டு கேக்குதாடா இங்கே !

உள்ளே மனம் துடிக்கிதடா !
வெளிய பணம் பார்க்க தடுக்குதடா இங்கே !

என்னை மகனாக பெற்றவன் தவிக்கிரானடா !
எனக்கு மகனாக பிறப்பவன் நலம் வாழ நினைக்கிறேனடா !

உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையடா !
பணம் இல்லாத வாழ்க்கை ஊனமடா !

முயற்சி செய்து ஒடுவேனடா !
முடியும் வரை பாடுபடுவேனடா!

இதுவரை நான் கடந்தது உணர்ந்தேனடா !
இனி அடைய போவதையும் அறிவேனடா !

யானைக்கு பலம் தும்பிக்கையடா !
எனக்கு பலம் நம்பிக்கையடா!....

வெற்றி ....

தொடரும் வளரும் படரும்.......

எழுதியவர் : gomkarthik (13-Jul-14, 6:27 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 136

மேலே