வெட்ட வெளியில்
இனி
எழ முடியாது.
இத்தனை அருகில்
வரும் வரை
எப்படி உணராமல் இருந்தேன்
அப்படியே அமர்ந்து விட்டேன்
அவளும்
கண்டும் காணாமல்
புன்னகைத்து விட்டு
கடந்து விட்டாள்.
ஏனோ
அதற்கு பின்
அவளை முதுமை
அடைந்தவளாக
நினைக்கத்
தொடங்கி விட்டேன்
அவளும்
ஒரு வெட்ட வெளியில்
தொலைந்தவளாகவே
என்னைக் கடந்து
கொண்டிருந்தாள்.
செந்தேள்