சூரியனில் ஒளியில்லை

சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!

கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!

வானில் தோன்றும் வானவில்லை எடுத்து .....
இவள் இமை புருவங்கள் படைத்தானோ ....!!!!

உலகில் உள்ள மலர்களை திரட்டி .....
மலரினும் மிருதுவான இவள் இதழ் படைத்தானோ....!!!!!

ஊதும் புல்லாங்குழலில் இரு துவாரங்கள் எடுத்து ....
இவள் மூக்கை படைத்தானோ ....!!!

மலராத மலர்களின் தேனை எடுத்து ....
இவள் செவ்வாயை படைத்தானோ ....!!!!

தாமரை இலையின் அழகினை ஒன்றுசேர்த்து ....
இவள் நெற்றியினை படைத்தானோ ....!!!!

இவளின் ஒருபாதி அழகை வர்ணிக்கவே ....
வார்த்தை தேடுகிறேன் ....!!!!!

வாசுகியை அவளையும் வள்ளுவனாய் எனையும் ...
படைத்த கடவுள் அவளை வர்ணிக்க வார்த்தைகளை ....
படைக்க மறந்தான் இவளின் பேரழகை கண்டு ....!!!!!

படைத்த கடவுள் வார்த்தைகளை மறந்தான் ....
இவளை பார்த்தனான் எனை மறந்தேன் ....
இவளை மட்டுமே நினைக்க...!!!!

கம்பன் படைத்த கவியின் இலக்கணம் இவள்தானோ ...!!!!

எழுதியவர் : மணிவண்ணன் சாமிக்கண்ணு (22-Jul-14, 7:23 pm)
பார்வை : 76

மேலே