அமுத நிலாவே

அலைகடல் உதித்த பொற்குடமே
அமுதை பொழியும் இள நிலாவே
விண்ணவர் ஆயிரவர் வேண்டி நிற்பார்
கருமுகில் அவுணர் சூழ்ந்து கொள்ள
மின்னல் கொடியாள் அவுணரை விரட்டிட
கங்குலி மோகினி அமுது படைப்பாள்
பாரெல்லாம் பால் அமுது பரவியதே .

=========================================================
NB : மோகினி தேவர்களுக்கு பாற்கடலில் கிடைத்த அமுதை பரிமாறும் புராணத்தை சார்ந்து , ஒரு கற்பனை .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (24-Jul-14, 7:31 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 132

மேலே