கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி

வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;

புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;

சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது;

அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;

குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;

தன்னிலைவிளக்கம் என்பது
தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது;

பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது;

தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது;

தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;

பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;

காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;

கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது;

நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;

நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது;

எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;

மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;

சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது;

கேலி, கிண்டல், நக்கல்,
நையாண்டி என்பது
நீங்கள்
இதுவரை படித்தது


கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி இந்த தலைப்பை தந்த இஸ்மாயிலுக்கு நன்றி!

அப்பாடா நீண்ட கவிதை எழுதனும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது;

ஐயோ... யார் யாரெல்லாம் முகவரி தேடி வந்து அடிக்கபோறாங்களோ தெரியலையே........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

எழுதியவர் : பசப்பி (9-Aug-14, 10:38 am)
பார்வை : 6590

மேலே