கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி
வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;
புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;
சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது;
அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;
குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;
தன்னிலைவிளக்கம் என்பது
தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது;
பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது;
தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது;
தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;
பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;
காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;
கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது;
நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;
நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது;
எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;
மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;
சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது;
கேலி, கிண்டல், நக்கல்,
நையாண்டி என்பது
நீங்கள்
இதுவரை படித்தது
கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி இந்த தலைப்பை தந்த இஸ்மாயிலுக்கு நன்றி!
அப்பாடா நீண்ட கவிதை எழுதனும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது;
ஐயோ... யார் யாரெல்லாம் முகவரி தேடி வந்து அடிக்கபோறாங்களோ தெரியலையே........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........