கற்பிழந்தவனா நான்
கற்பிழந்தவன் என்கிறார்கள்
என்னை !
நான் கண்ட ஒரு பெண்ணை என்
கவிக்கு கருப்பொருள்
ஆக்கினேன் என்பதற்காக !
புரியவில்லை எனக்கு !
எப்படி எழுதுவது கரு கிடைக்காமல் !
கழுதைகளோடு கதையலப்பவனுக்கு
என் கவிதை பற்றி என்ன தெரியும் !
கண்ணகியின் காவியம் படைத்தவனும்
பாஞ்சாலி சபதம் படைத்தவனும்
கற்பிழந்தவன் என்கிறாயா !
பெண்ணின் கற்பம் நிறைப்பவன்தான்
கற்புடயவன் என்றால் நான்
கற்பிழந்தவன்தான் உன் பார்வையில்!
என் கற்பனைகள்கூட
கண்ணீர் வடிக்கிறது
கற்பரியா ஒருவன்
கற்பிழந்தவன் என்றதால்
என்னை !