கற்பிழந்தவனா நான்

கற்பிழந்தவன் என்கிறார்கள்
என்னை !

நான் கண்ட ஒரு பெண்ணை என்
கவிக்கு கருப்பொருள்
ஆக்கினேன் என்பதற்காக !

புரியவில்லை எனக்கு !
எப்படி எழுதுவது கரு கிடைக்காமல் !

கழுதைகளோடு கதையலப்பவனுக்கு
என் கவிதை பற்றி என்ன தெரியும் !

கண்ணகியின் காவியம் படைத்தவனும்
பாஞ்சாலி சபதம் படைத்தவனும்
கற்பிழந்தவன் என்கிறாயா !

பெண்ணின் கற்பம் நிறைப்பவன்தான்
கற்புடயவன் என்றால் நான்
கற்பிழந்தவன்தான் உன் பார்வையில்!

என் கற்பனைகள்கூட
கண்ணீர் வடிக்கிறது
கற்பரியா ஒருவன்
கற்பிழந்தவன் என்றதால்
என்னை !

எழுதியவர் : முகில் (9-Aug-14, 5:30 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 264

மேலே