அமுதே தமிழே

தமிழ் நமக்கு உயிராகும் – அது
உணர்வை வளர்க்கும் பயிராகும்
இனிமை என்பது பேராகும் – பல
மொழிகளுக்கு அதுவே வேராகும்
தித்திக்கும் தமிழில் உரையாடு – தினம்
தமிழ்மொழி தழைக்கப் பண்பாடு
வாழ்வுக்கு ஆதாரம் தமிழல்லவா – அது
வான்புகழ் படைத்த மொழியல்லவா
மொழியில் சிறந்தது தமிழன்றோ– அறிஞர்
சொன்ன உண்மையும் அதுவன்றோ
விழிக்கு இமைதான் துணையாகும் – நம்
வாழ்வுக்குத் தமிழே ஒளியாகும்