தீண்டும் ஏமாற்றங்களே - சந்தோஷ்

மீண்டும் மீண்டும்
தீண்டும் ஏமாற்றங்களே..!
சற்று பொறுத்துக்கொள்ளுங்களேன்.
வெறுத்துப்போய் உணர்வு
மரத்துக்கிடக்கிறேன்.
சிலநொடிகளாவது என்னை
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
அனுமதி தாருங்களேன்.

வெளியிடும் மூச்சு
உள்ளிழுக்கும் எதிர்பார்ப்பில்தானே
உயிர்நம்பிக்கை வாழும்..

சற்று பொறுத்துக்கொள்ளுங்களேன்
நான் விட்ட மூச்சு
மீண்டுவந்துவிட்டதா?
சோதித்துப்பார்க்க எனக்கொரு
வாய்ப்பு தாருங்களேன்.

நான் ஜடமா?
இல்லை
உயிர் ஜீவனா?
பரிசோதிக்க
ஒரே ஒருவாய்ப்பு
தாருங்களேன்
என்னை காதலிக்கும்
என் ஏமாற்றங்களே..!

எதற்காக எனக்கு இந்த உலகம் ?
எதற்காக இந்த உலகில் சாதிக்கிறேன்?
எதற்காக இன்னும் இங்கே வாழ்கிறேன்.?
அர்த்தம் தெரியா அகராதியில்
எனது பெயர் மட்டும்
பலப்பக்கங்களில் அச்சிடப்படுகிறது.

எனது அடுத்த நிம்மதிக்கு
வாய்ப்பு ஒன்று வருகிறதாம்..
ம்ம்ம் செல்லுங்கள்.!
வழியில் தடைக்கல் போடுங்கள்..!
என்னிதயத்தில் வலியை போடுங்கள்.
ஏமாற்றங்களே.
என்னை சுற்றும்
என் ஏமாற்றங்களே..!

உங்கள் ஆட்டத்திற்கு
நான் செய்த ஒரே தவறு.
இந்த மண்ணில்
நான் பிறந்ததுமட்டும்தான்.

----------------இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (21-Aug-14, 10:10 am)
பார்வை : 434

மேலே