மீண்டும் டார்வின்

கண்ணாடிச் சுவர்களாய்
தடுப்படைத்து
புறம் உறிஞ்சி சுயநலம்
வளர்த்திருக்கிறது
உலகம்....!!

சத்தங்களைச் செரித்திருந்த
சிலிக்கான்
பாறைகளுக்கெதிரான
உயிர்களின் ஓலங்கள்
ஒலித்தபடியே இருந்தன
அமானுஷ்யங்களாய்............!!

உருள்வதும்
உருட்டுவதுமாய்
பரவலும்
படபடப்பதுவுமாய்
எந்திரங்கள் மட்டும்
பேசிக்கொண்டிருந்தன
ஊமையாகிவிட்ட
மானுடங்கள் கடந்து.....!!

விரல்திசுக்கள்
தொடுதிரை போட்டான்களுக்குமான
கலவிகளில்
அறியப்படுவதாயிருக்கிறது
மொழி....
எப்போதாவது உதடுகள்
காமம் வழிக்க...
உள்நீண்டிருந்த
உறுப்புக் கோர்வைகள்
உணவு விழுங்க....!!!


இன்னும் மிச்சமிருக்கும்
ஏதாவது ஒரு
கானகத்தில்
கர்ப்பிணி மான்கள்
வேட்டையாடத் தவிர்த்து
பசித்திருக்கும்
சிங்கத்திலோ...சிறுத்தையிலோ
முளைக்கத் தொடங்கியிருந்தது
அடுத்த
பிரபஞ்சத்திற்கான
பரிணாம வளர்ச்சி....!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (21-Aug-14, 8:50 am)
பார்வை : 94

மேலே