இயேசு கிறித்து அருளற்றவரா - 3 1
இயேசு கிறித்து அருளற்றவரா ? ௩/௧
—
இயேசு கிறித்து தன்னுடைய நற்செய்தி பணிக் காலத்தில், தன்னிடம் வந்த ஏராளமான மக்களுக்கு, அவர்களது பசியைத் தணிக்க மீனையும் , அப்பத்தையும் உண்பதற்கு அளித்தார் என நற்செய்தி நூல்கள் கூறுகின்றன .
" மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். "
( மத்தேயு 14: 19- 20 )
சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார்.
( மாற்கு 8:7 )
இயேசு கிறித்து தமது சீடர்களுடன் பாஸ்கா பண்டிகையை அனுசரித்தார் என்பதும் தெரிய வருகிறது . பாஸ்காவின் போது என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .
" புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள் .
அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள்.
சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
( மாற்கு 14 : 12,,14 ,16 )
எனவே இயேசு கிறிஸ்து தன் சீடர்களோடும் மாமிச / புலால் உணவை உண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது .
இயேசு கிறித்து மரித்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, தனது சீடர்களுக்குக் காட்சி கொடுத்த போதும், அவர் மீன் உணவை உண்டிருக்கிறார்.
" அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார்.
அவர்கள் வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.
அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
( லூக்கா 24: 41 - 43 )
இதிலிருந்து , இயேசு கிறித்து தானும் புலால் உணவை உண்டார் , பிறர்க்கும் உண்பதற்கு பகிர்ந்து கொடுத்தார் என்பது தெள்ளெனத் தெரிய வருகின்றது .
புலால் உணவு உண்பதைப் பற்றி இயேசு கிறித்துவின் நிலைப்பாடு என்ன ?
" வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார். "
( மத்தேயு 15:11 )
எனவே புலால் உண்பது தவறான செயல்பாடு அல்ல என்பதே இயேசு கிறிஸ்துவின் நிலைப்பாடு . எனவே இயேசு கிறிஸ்துவும் , திருவள்ளுவரும் கோட்பாட்டளவில் முற்றிலுமாக வேறுபடுகிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது .
திருவள்ளுவர் மேலும் கூறுகிறார் . கொல்லாமையையும் , புலால் மறுத்தலையும் கடைபிடிப்பவரை எல்லா உயிர்களும் தொழுமாம் !
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும் . [
(குறள் 300 )
அப்படியானால் கோடானு கோடி மக்களின் தொழுகைக்கு உரியவரான இயேசு கிறித்து , தொழத் தக்கவர் இல்லையா ?
சரி , கொல்லாமை பற்றிய இயேசு கிறித்துவின் நிலைப்பாடு ? .....