இயேசி கிறித்து அருளற்றவரா - 2 1

இயேசு கிறித்து அருளற்றவரா ? - ௨/௧


இயேசு கிறிஸ்து யூத இனத்தைச் சார்ந்தவர் . ஆண்டுதோறும் பாஸ்கா பண்டிகையை கடைப்பிடித்தல் யூதர்களுக்கு கடவுள் இட்ட கட்டளையாக இருக்கிறது . இயேசு கிறிஸ்துவும் அவரது பெற்றோரும் ஆண்டுதோறும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடியதாகத் தெரிகிறது .

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;
(லூக்கா 2:41 )

இயேசுவை அழைத்துக் கொண்டு அவரது பன்னிரண்டாவது வயதில் , எருசலேமுக்குச் சென்ற நிகழ்ச்சியும் குறிப்பிடப் பட்டுள்ளது .

பாஸ்கா பண்டிகையின் உணவு முறை பற்றி கடவுளே இவ்வாறு கூறியுள்ளார் என பைபிள் கூறுகிறது .

"இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.

ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.

இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.

இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.

இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள்.

அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா ".
( விடுதலைப் பயணம் 12: 3 -11 )

இந்தக் கட்டளைகள் பைபிளின் வேறு சில நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே இயேசு கிறிஸ்து ஒரு மாமிசம்/ புலால் உண்பவர் என தெரிய வருகிறது.

மேலும்

எழுதியவர் : -யாதுமறியான். (20-Jun-25, 10:28 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 6

மேலே