ஒரு கைதியின் கண்ணீர் - நாகூர் லெத்தீப்

மனிதனின்
வாழ்க்கை
புதைக்கப்படும் இடம்.......!
பாவம்
செய்ததால்
விளைவு
தாங்கமுடியாத
வேதனை
காலமெல்லாம்.........!
அடிமைத்தனமே
நிறைந்து
காணப்படும்
சோகப்படும்........!
உறக்கம்
இங்கே தேடும்
அமைதியையே
நாடும்.......!
தேடினாலும்
கிடைப்பதில்லை
கடந்து வந்த
வாழ்க்கை........!
சுகத்திற்க்காக
அனுபவிக்கும்
தண்டனை
வேதனை.........!
உறவுகள்
அருகாமையில்
கண்ணீர் துளிகளாக
கனவுகள்.........!
விடுதலை
எங்கே
விடுமுறை எங்கே
ஏக்கமுடன்
சிறைக்கதவுகளை
நோக்கி.........!