+என்னவள் நீயேயென் உயிரெழுத்தாவாய்+

நாணலுக்கும் நாணம் வந்ததோ
==உன்னகம் பார்த்து தலைகுனிந்ததோ

கானலும் நிஜமாகக் காத்திருக்குதோ
==உன்னடி யோசையைப் பார்த்திருக்குதோ

அன்னமும் அமைதியாய் ஆர்ப்பரிக்குதோ
==அதனிணை கண்டதாய் ஆட்டமிட்டதோ

மன்னவ னிவனின் கையெழுத்தானாய்
==என்னவள் நீயேயென் உயிரெழுத்தாவாய்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Aug-14, 11:40 am)
பார்வை : 73

மேலே